Advertisement

Responsive Advertisement

உன்னோடு என் காதல்

 மௌனங்கள் பேசாதா என காத்திருந்த நீ என் வார்த்தைகள் நிதம் நிதம் உன்னை சுமந்ததை அறிந்திருக்கமாட்டாய்..!

இருளில் மட்டுமே ஒளி தேடிய நீ என்றுமே அறிய மாட்டாய் உன் விழியில் உறங்கியிருக்கும் என்னை..!

போகாத இடம் தேடி பேசாத மொழி சேர்த்து காணாத கண்மணிக்காக காத்திருக்கும் நீ உன் நிழலில் உருவாய் உன் குரலில் இசையாய் இருக்கும் என்னை கண்டறியமாட்டாய்..!

காதலோடு கண்கள் மூடி நீ சென்ற பாதைதோறும் காற்றாய் நிற்கிறேன்!

என் இதயத்து நாளமெல்லாம் நமக்காய் துடிக்க உன் மனமோ எவளுக்கோ வருந்தியிருந்தது! 

உன் ரத்தத்தில் நிறமாய் கலக்க துடிக்கும் என்னுயிரை கைபிடித்து காத்திருந்தேன் நீ உன் உயிரை எவளுக்கோ மாய்க்க துடித்தபோது!

எவளோடோ நீ ஒரு நொடியேனும் வாழ நினைத்தபோது உன் ஒவ்வொரு நொடியாகவும் நானே இருக்க ஆசைக்கொண்டேன்..! 

தேடலோடு நீ ஓட உன் உயிரோடு என்னை அனுப்பியிருந்தேன்!

எவளோடோ நீ உருக என் உயிரையும் உன்னோடு கலந்திருந்தேன்!

பாலையாய் போன நெஞ்சத்தில் உயிர்உரம் இட்டு பசுமையாய் வைத்திருக்கிறேன் உன் மீது நான் கொண்ட ஆன்மக்காதலை..!

இரவுகள் முடியாத ஒரு இரவில் நீ என்னை உன்னிலிருந்து கண்டறிந்தால் அப்போதேனும் அறிவாயா உன் சுவாச காற்றெல்லாம் என் நுரையீரலில் தங்கியிருந்ததை..?


Post a Comment

0 Comments